Colombo (News 1st) பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 440 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் 6 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.
பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்தும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 440 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.