Sangathy
News

களுவாஞ்சிக்குடியில் பேத்தை மீனை சமைத்து உண்ட பெண் உயிரிழப்பு

Colombo (News 1st) மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, மாங்காடு பிரதேசத்தில் பேத்தை மீனை உண்ட பெண் உயிரிழந்துள்ளார்.

கடையில் இருந்து வாங்கிய மீனை சமைத்து உண்ட நால்வருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதன்போது, 27 வயதான பெண் வீட்டிலேயே உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஏனைய மூவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

உயிரிழந்த யுவதியின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், ஒவ்வாமை ஏற்பட்ட மற்றவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

FM clarification: She is not the Foreign Secy

Lincoln

Govt. hospitals lack basic means to fight widespread malnutrition in children

Lincoln

Money Laundering Business of the Dissolute Demagogue Donald Trump

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy