Colombo (News 1st) முல்லேரியா – ஹல்பராவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாத்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பராவவில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றில் இருந்து ஐந்தரை வயதான சிறுவனின் சடலமொன்று நேற்று முன்தினம்(09) மாலை கண்டெடுக்கப்பட்டது.