வயது 80
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Bandarawela, Sri Lanka கல்வியங்காடு, Sri Lanka கொழும்பு, Sri Lanka Grigny, France
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பதுளை பண்டாரவளை, யாழ். கல்வியங்காடு, கொழும்பு, பிரான்ஸ் Grigny ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சிவத்திராதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டு கிருத்தியக் கிரியைகள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று 11:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
09 Square Surcouf
91350 GRIGNY
(RER D – Grigny-Centre)