Colombo (News 1st) புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதையில் தண்டவாளங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
ரயில் பாதை புனரமைப்பு பணிகளின் போது நீக்கப்பட்ட தண்டவாளங்களை நேற்றிரவு கொண்டு சென்ற நபர்கள், யாழ் ராணி ரயிலில் மோதியதையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ரயில் தண்டவாளங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட Gas Cutter, ஒக்சிஜன் தாங்கி மற்றும் 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.
அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.