Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமான எல்பிட்டி பிரதேச சபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடையவுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி மூலம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி வரை எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.