Colombo (News 1st) பொல்பிட்டிய – ஹம்பாந்தோட்டை இடையிலான 220 கிலோவாட் திறனுடைய புதிய மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் இன்று(24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
காணி தொடர்பான பிரச்சினையால் இந்த புதிய மின் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
150 கிலோமீட்டர் லைன் கொண்ட இந்த கட்டமைப்பின் ஊடாக, தென் மாகாணத்திற்கு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.