Colombo (News 1st) சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போது இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.