Sangathy
News

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை, வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பம்

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) ஆரம்பமானது. 

ஜனாதிபதி செயலக கட்டடத்தில் இருந்து இந்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 

10 வருடங்களுக்கு ஒரு முறை சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. 

இதற்கமைய, இறுதியாக  2012 ஆம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. 

குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. 

இம்முறை வழக்கமான காகிக ஆவணங்கள் மூலமான தரவு சேகரிப்புடன், நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Related posts

IMF பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை

Lincoln

பிரதமரை சந்திப்பதற்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

Lincoln

Chile’s ‘Brexit moment’: Congress passes pensions bill, president agrees to sign it

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy