Sangathy
News

ஹப்புத்தளையிலிருந்து பொரலந்தை வரையான வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிப்பு

ஹப்புத்தளையிலிருந்து பொரலந்தை வரையான வீதிப் போக்குவரத்து இன்று காலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இன்று(06) அதிகாலை 13 ஆம் மைல் கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹப்புத்தளையிலிருந்து பொரலந்தை வரையான வீதிப் போக்குவரத்தில் முற்றாக தடையேற்பட்டதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஹப்புத்தளையிலிருந்து பொரலந்தை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் தியத்தலாவை, கிரிந்த ஊடாக செல்ல முடியுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொரலந்தையிலிருந்து ஹப்புத்தளைக்கு பயணிக்கும் வாகனங்கள், கிரிந்த, தியத்தலாவை ஊடாக செல்ல முடியுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்படும் வரை மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

Abrupt cancellation of Light Rail Transit project has led to waste of Rs 10.6 bn: NAO

Lincoln

Prez appoints acting ministers for Finance, Women and Child Affairs

Lincoln

சீனாவில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy