Sangathy
News

இன்றைய வானிலை எதிர்வுகூறல்…

Colombo (News 1st) வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், குறித்த மாகாணங்களில் 50 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்திற்காக 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு – ஜனாதிபதி தெரிவிப்பு

John David

செட்டிக்குளம் இரட்டைக் கொலை; 19 வயதான இளைஞர் கைது

John David

டயானா கமகேவிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy