Colombo (News 1st) இன்று(23) மலையக மார்க்கத்தினூடாக பதுளை வரை போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து ரயில் சேவைகளையும் நானுஓயா வரை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் N.J.இதிபொல தெரிவித்துள்ளார்.
மலையக ரயில் மார்க்கத்தின் பல பகுதிகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று மேலும் சில பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.