Sangathy
News

களனி பல்கலையின் மூடப்பட்டிருந்த 03 பீடங்களும் நாளை(11) மீள திறப்பு

Colombo (News 1st) களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டிருந்த 03 பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் நாளை(11) மீள ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகள் நாளை(11) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

மானுடவியல் மற்றும் சமூகவியல் பீடத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் குறித்த 04 பீடங்களும் கடந்த 04 ஆம் திகதி மூடப்பட்டன.

பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதலை நடத்தியமை, மேலும் இரு அதிகாரிகளை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவங்கள் பதிவானதை அடுத்து குறித்த 04 பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

Related posts

ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை

Lincoln

மத்திய வங்கி சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க ஜனாதிபதி இணக்கம் – எதிர்க்கட்சி தலைவர்

Lincoln

இலங்கை கடற்படையின் புதிய பணிக்குழாம் பிரதானியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நியமனம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy