Sangathy
News

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்றைய தினம் (01) பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 50,000 ரூபாய் பணம் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இருவரில் ஒருவர் யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் உள்ளிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திரிபோஷ உற்பத்தி வழமைக்குத் திரும்பியது

Lincoln

‘Finace Ministry could not have been unaware of SriLankan, CPC bonuses’

Lincoln

விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளதாக தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy