Sangathy
News

பாராளுமன்ற கூட்டத்தொடர் 24 ஆம் திகதியுடன் நிறைவு

Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானியை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி வௌியிடுவார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் பதவிக்காலங்களும் முடிவடையவுள்ளன.

அதற்கமைய பாராளுமன்ற கூட்டத்தொடர் மீள ஆரம்பமான பின்னர் குறித்த தெரிவுக்குழுக்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளன.

Related posts

Dr. Pethiyagoda blames Lanka’s woes on rulers, bureaucrats not using common sense

Lincoln

2023 உயர் தர பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்

Lincoln

Rain threatens New Zealand vs Sri Lanka ICC World Cup match in Bengaluru

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy