Sangathy
AmericaInternationalLatestNews

செங்கடலில் பயணிக்கும் போர்க்கப்பல்களுக்கு பகிரங்க அறிவிப்பு..!

செங்கடலில் பயணிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக யேமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யேமனில் உள்ள ஹவுதி அமைப்பினரின் இடங்களை தாக்கும் பங்கேற்கும் அனைத்து போர்க்கப்பல்களும் தங்களது தாக்குதலுக்கு இலக்காகும் என்றும் ஹவுதி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கை காரணமாக செங்கடலில் பயணம் செய்யும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அது உலக சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Related posts

பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளையில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானம் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

Lincoln

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்

John David

First bond scam case: Arjuna Mahendran et al acquitted from charges under Public Property Act, but case to continue

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy