Colombo (News 1st) காலி – மாகும்புர, தெற்கு அதிவேக வீதி பஸ் ஊழியர் சங்கம் இன்று(11) சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
தற்போது நடைமுறையிலுள்ள நேர அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதி பஸ் ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிலங்க சந்தருவன் தெரிவித்துள்ளார்.