Sangathy
Srilanka

மின்னல் தாக்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு..!

நாட்டில் நேற்று பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (29) மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இணையத்தளம் ஊடாக குற்றச் செயல்கள் அதிகரிப்பு..!

Lincoln

தனிப்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை : நால்வர் கைது..!

tharshi

76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy