ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்யும் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து பங்களிக்கும்.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் வெளியுறவுத் துணையமைச்சர் ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம் இவ்வாறு கூறினார்.
கடல்துறையின் தற்கால, வருங்கால அச்சுறுத்தல்கள் குறித்த விவாதத்தில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை முன்வைத்து அவர் பேசினார்.
கப்பல் போக்குவரத்து துறைக்கு ஆதரவளித்து கடலோடிகள் அனைவரின் பாதுகாப்பையும் சிங்கப்பூர் உறுதி செய்யும் என்றார் ஸூல்கர்னைன்.
நீரிணைகளில் அனைத்துலகக் கப்பல் போக்குவரத்துக்கான உரிமை குறித்து சிங்கப்பூர் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
ஏதோ ஒரு பகுதியில் அனைத்துலகச் சட்டம் சீர்குலைந்தால் அது உலகின் மற்ற பகுதிகளுக்கும் அபாயமான முன்மாதிரியை ஏற்படுத்துவதாகத் ஸூல்கர்னைன் கூறினார்.
கடல்துறையின் தற்கால, வருங்கால அச்சுறுத்தல்கள் குறித்த விவாதத்தில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை முன்வைத்து அவர் பேசினார்.
கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஆதரவளித்து கடலோடிகள் அனைவரின் பாதுகாப்பையும் சிங்கப்பூர் உறுதி செய்யும் என்றார் ஸூல்கர்னைன்.
நீரிணைகளில் அனைத்துலகக் கப்பல் போக்குவரத்துக்கான உரிமை குறித்து சிங்கப்பூர் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
ஏதோ ஒரு பகுதியில் அனைத்துலகச் சட்டம் சீர்குலைந்தால் அது உலகின் மற்ற பகுதிகளுக்கும் அபாயமான முன்மாதிரியை ஏற்படுத்துவதாகத் ஸூல்கர்னைன் மேலும் கூறினார்.

