கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

கனடாவின் ‘ஸ்டோனி க்ரீக்’ பகுதியில் நேற்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர் என ஹாமில்ட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2:25 மணியளவில், ரைமல் ரோடு ஈஸ்ட் மற்றும் அப்பர் சென்டெனியல் பார்க்வே ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ள ‘கேண்டில்வுட் டிரைவ்’ குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஹாமில்ட்டன் காவல்துறையின் ‘கொலை வழக்கு விசாரணைப் பிரிவு’ தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது காவலில் எடுக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்துக் காவல்துறை இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் விசாரணைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles