வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி ட்ரம்பின் மிக நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களில் ஒருவர் இப்பதவியிலிருந்து விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பதவி விலகலுக்குப் பிறகு, ஜனாதிபதி ட்ரம்பின் “மேக் அமெரிக்கா கிரேட் எகெய்ன்” (MAGA) இயக்கத்தின் எதிர்கால வடிவத்தை வடிவமைக்கும் வெளியாரிடத் தொடர்பு ஆலோசகராகவும் கட்சிப் பணியாளராகவும் லீவிட் செயல்படுவார் என்று அவரும், ட்ரம்பும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லீவிட் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தனது குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதை நோக்கமாககக்ட கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் தனது இரண்டாவது குழந்தையான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், சமீபத்தில்தான் பேறுகால விடுமுறையிலிருந்து பணிக்குத் திரும்பினார்.
அதேவேளையில், வெள்ளை மாளிகையில் பணியாற்றிய அனுபவத்தை “வாழ்நாளின் பெருமை மற்றும் மறக்க முடியாத பயணம்” என லீவிட் வர்ணித்துள்ளார்.
