இலங்கையின் பொருளாதாரம் 2022 இல் 11% சுருங்கியது, இந்த ஆண்டு 3.5 அல்லது 4.0% சுருங்கலாம் ஆனால் 2024 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுராதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மத நிகழ்வில் உரையாற்றினார்
எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் என்பன எவ்வகையிலும் சீர்குலைந்தால், நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களைப் போன்று நெருக்கடிக்குள் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.