Colombo (News 1st) உலக மக்களின் பாவங்களை சுமந்த மனுக்குமாரன் இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் தன் இன்னுயிரை இரட்சிப்பின் மேன்மை கருதி தியாகம் செய்தார்.
எனினும் துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரித்துக் கொண்டு, வெளியரங்கமான கோலமாகி அவைகளின் மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தவராய் மீட்பராம் இயேசு கிறீஸ்து இன்று போன்றதொரு நாளில் உயிர்த்தெழுந்தார்.
உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நேற்றிரவு (08) இடம்பெற்றது.
You must be logged in to post a comment.