Sangathy
News

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை IMF அதிகரித்துள்ளது

Colombo (News 1st) பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்காலிகமாக அதிகரித்துள்ளது.

இதற்கிணங்கவே இலங்கை மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு கடனுதவியை வழங்கியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடனுதவி வழங்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதனை முகாமைத்துவம் செய்யும் விதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதில் இந்தியா வழங்கிய பங்களிப்பிற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு   தொடர்பில் ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் எதிர்காலத் திட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் மாநாடு நேற்று இடம்பெற்றது.

Related posts

பேராதனையில் 4 பிள்ளைகளின் தந்தை தாக்கி கொலை : இருவர் கைது

John David

Change in electronic interlocking system led to Odisha crash, rescue work over – Railway Minister

Lincoln

குற்றச்செயல்களில் ஈடுபடும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க கைது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy