Sangathy
News

குற்றச்செயல்களில் ஈடுபடும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க கைது

Colombo (News 1st) குற்றச்செயல்களில் ஈடுபடும் பக்கலா என அழைக்கப்படும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க என்பவர்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், ஊரகஸ்மன்ஹந்திய – கொரகீன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் கடத்தல்காரரான மைக்கல் என அழைக்கப்படும் பிரதீப் ஜயவர்தன என்பவருடன் குறித்த சந்தேகநபர் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

44 வயதான பக்கலா என அழைக்கப்படும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க, ஊரகஸ்மன்ஹந்திய பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Global economy dangerously close to a recession: World Bank

Lincoln

Ponnambalam raises breach of privilege over his arrest

Lincoln

60 அல்லது 70 ஓவர்கள்தான்: அதீத நம்பிக்கையில் ஜேம்ஸ் ஆண்டர்சன்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy