Colombo (News 1st) இன்று (15) மாலை 6 மணி வரையான கடந்த 32 மணித்தியாலங்களில் விபத்திற்குள்ளான 200 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 78 பேர் நேற்றைய தினம் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் குமார விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குறித்த காலப்பகுதியில் தீ விபத்திற்குள்ளான ஒருவர் மாத்திரமே இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.