Sangathy
News

நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது

Colombo (News 1st) முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்பரப்பில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.

சந்தேகநபர்களிடமிருந்து 8 டிங்கி படகுகளும் சுழியோடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு, முல்லைத்தீவு, கிண்ணியா, சீன துறைமுகத்தை சேர்ந்த 29 தொடக்கம் 56 வயதிற்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டிங்கி படகுகள், உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Related posts

அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்; காஸாவில் பதற்றம்!

Lincoln

தட்டம்மை நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lincoln

பாத யாத்திரையின் இடைநடுவே உயிரிழந்த யாத்திரிகர்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy