Colombo (News 1st) எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 07 மணி முதல் மறுநாள் அதிகாலை 05 மணி வரை பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டிய ரயில் நிலையத்திற்கு இடையிலுள்ள கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
களனிவௌி மார்க்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாக குறித்த ரயில் கடவை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வீதி மூடப்படும் காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.