Colombo (News 1st) கொட்டாவ, தர்மபால வித்தியாலயத்திற்கு அருகில் இன்று(21) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மருத்துவ ஆய்வுகூடத்தில் பணியாற்றும் 30 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.