Colombo (News 1st) வறண்ட காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு சிறுபோகத்திற்கான நீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இம்முறை பருவப்பெயர்ச்சியின் போது எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சியை விட 70 வீதம் குறைந்த அளவிலேயே மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்தார்.
இதன் காரணமாக நாச்சாதுவ மற்றும் உடவலவ ஆகிய பகுதிகளின் வயல் நிலங்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மகாவலி திட்டத்தின் நீரேந்து பகுதிகளில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நீரின் அளவு 46 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலவ வலயத்தின் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நீரின் அளவு 12 வீதமாகக் காணப்படுகிறது.
நீர்த்தேக்கங்களின் கொள்ளளவும் 38% வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.
இதனிடையே, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதுமான அளவு மழைவீழ்ச்சி நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாரத்ன குறிப்பிட்டார்.