Colombo (News 1st) ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, இன்று(24) மாலை ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் N.J.இதிபொலகே கூறினார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(23) பகல் முதல் ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.