Colombo (News 1st) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய P.H.N.ஜயவிக்ரம ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.
You must be logged in to post a comment.