Sangathy
News

பேய் ஓட்டும் பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!

பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் ஆலயமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில் தங்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறப்படுகின்றது. அதேவேளை குறித்த பூசாரி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த நபருக்கும் பூசாரியின் மனைவிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததை அறிந்தே குறித்த பூசாரி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவர் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Teejay wins ‘Best Annual Report in Apparel Sector’ & Merit Certificate at CMA Awards

John David

Rape of Mannar for mineral sands on the cards

Lincoln

வீதி ஓரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்களை அகற்றுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy