Colombo (News 1st) வாழைத்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளுக்காக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கமும் சந்தேகநபர்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
வாழைத்தோட்டம் மாடிஸ் ஒழுங்கையில் நேற்று(30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு – 12 பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் உயிரிழந்தார்.