Colombo (News 1st) 50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் மின்சார பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மின்சார பஸ்களை இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.