Colombo (News 1st) ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை மற்றும் ஜப்பான் இணங்கியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பான் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் FUJIMARU Satoshi ஆகியோர் இடையே இன்று(31) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறித்த திட்டங்கள் தொடர்பான விசாரணையில் இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.