Colombo (News 1st) தேசிய கடன் மறுசீரமைப்பின் அடிப்படையில் இன்று(28) முன்னெடுக்கப்பட வேண்டிய பிணைமுறிகளின் மீள் விநியோகம் எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய வருமான சட்டத்தின் திருத்தங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இவ்வாறு பிணைமுறிகளின் மீள் விநியோகம் ஒத்திவைக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.