Colombo (News 1st) வெல்லம்பிட்டி பகுதியில் இன்று(26) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடையே 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் மற்றும் இராணுத்தினர் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.