Colombo (News 1st) சீதுவ – கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரின் மீது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டுகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.