நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை, இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருணாகல், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு, இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.