இந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஸீ தமிழின் சரிகமப என்கிற பாடல் போட்டியில் இளையோருக்கான 3 ஆவது அத்தியாயத்தில் (#saregamapalilchamps3) போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருக்கின்றார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலன்.
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவியான கில்மிஷா இன்று “ஈழக்குயில்” என்ற செல்லப்பெயரோடு ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் அடையாளமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றாள்.
சரிகமப பாடல் போட்டியில் கில்மிஷா கடந்து வந்த பாதை குறித்து இந்தக் காணொளி பேசுகின்றது.