Sangathy
News

காணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்பு

Colombo (News 1st) மன்னார் – செல்வேரி பகுதியில் காணாமல் போயிருந்த 43 வயதான நபரொருவர் இன்று(28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வேரி கிராமத்தை சேர்ந்த குறித்த நபர், கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஏற்கனவே வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் இன்று(19) ஆரம்பம்

Lincoln

நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் மேலும் இரண்டு கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன

Lincoln

Lotus Tower in partnership with Army Medical Corps holds free health camp for seniors

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy