Sangathy
News

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – இளைஞன் படுகாயம்!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் (31) வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

துன்னாலை வடக்கை சேர்ந்த யோகராசா திலக்சன் (வயது 21) எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவகத்தில் இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை உணவகத்தினுள் அத்துமீறி வாள்களுடன் புகுந்தவர்கள் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம்

John David

108 acres under security forces in NP to be distributed among 197 families today

Lincoln

Lankan peacekeepers in Mali suffer first casualties

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy