Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட 955 சந்தேகநபர்களுடன், 22 நாட்களுக்குள் யுக்திய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,475 ஆக அதிகரித்துள்ளது.
1,473 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
220 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பட்டியலிடப்பட்ட 4,584
சந்தேகநபர்களில் 2326 பேர் யுக்திய சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் யுக்திய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.