Colombo (News 1st) அதிவேக வீதியைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்கீழ் குறைந்தபட்ச வேகக்கட்டுப்பாடும் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2 வாரங்களுக்குள் குறித்த விதிமுறைகள் வர்த்தமானியில் வௌியிடப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.