Sangathy
News

சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆராய அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை

Colombo (News 1st) நிகழ்நிலை காப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு தொடர்புகள் குழுவின் சிரேஷ்ட தொழில்சார் பணிக்குழாமின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆழமான தௌிவை பெற்றுக்கொள்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதிநிதிகள், பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் ஆராயவும், நிகழ்நிலை காப்பு சட்டம் உள்ளிட்ட அண்மைய சட்டங்களுடன் தொடர்புடைய சிக்கல்கள் குறித்து கலந்துரையாடவும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினூடாக மக்களின் கருத்து வெளியிடும் உரிமை மட்டுப்படுத்தப்படுவதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு

John David

COPE summons Labour Secy.

Lincoln

பாடகரும் இசையமைப்பாளருமான கலாபூஷணம் M.S.செல்வராஜ் காலமானார்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy