Colombo (News 1st) இலங்கை தமிழ் – சிங்கள மெல்லிசை, பொப்பிசை, திரையிசை பாடகரும் சிரேஷ்ட இசையமைப்பாளருமான கலாபூஷணம் M.S.செல்வராஜ் காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அன்னார், தனது 85 ஆவது வயதில் நேற்றிரவு காலமாகியுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக நாளை (06) வைக்கப்பட்டு, நாளை மறுதினம் காலை 10 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்படவுள்ளன.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த அமரர் M.S.செல்வராஜ், இலங்கை வானொலியில் நூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.