Colombo (News 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து மேலும் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 60 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரையான காலப்பகுதிக்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மொத்தமாக 90 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment.