Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமையின் (04) பின்னர் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவோர் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமானதென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக இரு முறைமைகள் பின்பற்றப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமது திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியுமெனவும் தொலைபேசி அழைப்பின் ஊடாகவும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமெனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க