Colombo (News 1st) நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர், சட்டத்தரணி ஷாந்த நிரியெல்ல உள்ளிட்ட பணிப்பாளர் சபையை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விரைவில் புதிய பணிப்பாளர் சபையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.